search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாய்க்கால் தூர்வாரும் பணி"

    • துலுக்கன்குளம் மூலம் வன்னிமாநகரம் உள்ளிட்ட 8 கிராமங்களில் மொத்தம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • தூர்வாரும் பணியை புதுவாழ்வு சங்க நிர்வாகி கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    குரும்பூர்:

    நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளத்தின் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.

    சோனகன்விளை அருகே உள்ள துலுக்கன்குளம் மூலம் வன்னிமாநகரம், ராணிமகாராஜபுரம், கோயில்விளை, அடைக்கலாபுரம், நத்தக்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களில் மொத்தம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது குளம் மற்றும் வாய்க்கால்கள் தண்ணீரின்றி காணப்படுகிறது. இந்நிலையில் துலுக்கன் குளத்தின் மிகைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் கோரிக்கை விடுத்தனர்+.

    இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளத்தின் பாசன மடை ஒன்றின் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

    இந்த பணியை புதுவாழ்வு சங்க நிர்வாகி கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தனசேகர், முன்னாள் தலைவர் ராஜபாண்டி, மடை உறுப்பினர்கள் கோயில்விளை கணேசன், சொர்ணகோபி, கனகராஜ், பால்ராஜ், விவசாய சங்கம் அம்மன்புரம் ஆறுமுகம், கவுரவ ஆலோசகர் கடற்கரை தங்கம், வண்ணான்குளம் தலைவர் உதய்சிங், நீர்வளத்துறை பாசன ஆய்வாளர் முத்துக்குமார், பாசன உதவியாளர் சுடலைமுத்து, இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத்துறை எட்வின், மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமையில் பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×